நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Wednesday, September 22, 2010

இலங்கை தமிழ் எம் பி திரு சுரேஸ் பிரேமச்சந்திரனுடம் சந்திப்பு


 இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பியுமாக உள்ளவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். சென்னை வந்த அவர் சில புத்தகங்கள் வாங்கும் பொருட்டு நமது டிஸ்கவரி புக் பேலஸ்- கு வந்திருந்தார். அவருடன் இலங்கை நிலவரங்களை பற்றி உரையாடியதில்  “எனது வருத்தம் அங்குள்ள உண்மையான நிலவரங்கள் தமிழக தலைவர்களுக்கு  தெரிந்திருந்தாலும் கூட அதை பேசாமல் இன்னும் தலைவன் வருவான் தனி ஈழம் மலரும்”- என்று மட்டுமே பேசுவசுதுதான். இதனால் அங்குள்ள இன்றைய தமிழர்களுக்கு என்ன பயன் என்று பார்க்க வேண்டும். 
தலைவன் வரவேண்டும் என்பது அனைவரின் அவாதான். ஆனால் அதற்குள் நடந்து முடிந்திருக்கும் இன அழிப்பு மாற்றங்களை யார் தடுத்து நிறுத்துவது - என்று வருத்தத்துடன் கூறினார்.