நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Saturday, October 29, 2011

புதிதாக வலையேற்றம் கண்டுள்ள கண்ணதாசனின் புத்தகங்கள்


சேரமான் காதலி
 கவிஞரின் கதைகளிலே சொக்கி போயிருக்கிறோம் அவரது கட்டுரைகளிலே கர்வம் கொண்டிருக்கிறோம்.அவரது கதைகள் நம்மை கண்கலங்க வைத்திருகின்றன,அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு விருந்தாகவும்,சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருகின்றன இவை அத்தனையும் ஓன்று சேர்த்தால் எப்படி இருக்கும் அத்தான் சேரமான் காதலி மேலும் படிக்க..



     மனவாசம்
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட பொருள் இழப்புகளையும், அதனால் தோன்றிய மன காயங்களையும் சுய விமர்சனம் செய்து கவிஞர் கவிஞர் சுய சரிதை எழுதியுள்ளார்.மேலும் படிக்க..



வனவாசம்
1943-ல் இருந்து 1961 ஏப்ரல் வரை  என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.எனது மேன்மைகள் என்று நான் கொரிபிடுபவற்றை நான் பயத்துடனே குறிப்பிட்டுள்ளேன்.ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறும் அல்ல இது,ஒரு பெரிய கவிஞனின் வாழகையுமல்ல.வாழ்கை வலி போக்கன் ஒருவனின் உயர்வு தாழ்வுகளே இந்நூல்.ஏனென்றால்,என் காலத்துக்கு பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.-கண்ணதாசனமேலும் படிக்க..


                                 
அர்த்தமுள்ள இந்து மதம்   

  • எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார்
  • 'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.மேலும் படிக்க..

கண்ணதாசன் கதை  
தத்துவங்களை எளிய முறையில் பாமரனுக்கும் எடுத்து சொன்ன பெருமை கவிஞர் கண்ணதாசனுக்கு உண்டு. பள்ளிப் படிப்பை அவர் தொடரவில்லை என்றாலும், புத்தகப்படிப்பு அவரை வாழ்க்கையில் உச்சத்தில் உயர்த்தியது. கம்பராமாயணத்திற்கு தமிழில் உரை எழுதிய, அத்தனை உரை ஆசிரியர்களின் உரையை கண்ணதாசன் மனப்பாடமாகக் கூறுவார். மேலும் ..மேலும் படிக்க..


Thursday, October 27, 2011

7-ம் அறிவு - திரைவிமர்சனம்

கதை- அருமையான கதையாக  யோசித்திருப்பார்கள்
திரைக்கதை - முதல் 20 நிமிடம் உலகத்திரைப்படத்திற்கு இணையாக உள்ளது.

   ஆனால் அதன் பிறகு மிகவும் சிரமத்துடன் உட்கார வேண்டியுள்ளது. காதலை தவறாக , சுவாரஷ்யமில்லாமல் சொல்கிறார்களே என்று நினைக்கும் போது அது காதலே இல்லை என்று சொல்லி மேலும் ஏமாற்றுகிறார்கள்.  மற்றபடி- ஸ்ருதியும், இரண்டு சூர்யாவும்,  வில்லனும் அழகாக உள்ளனர். படம் எங்கு முடியும் என்று ஒருவாறு யூகிக்கும் போதே டபக்டீரென்று முடிகிறது.
வசனம்: சில இடங்களில் தமிழ் இன உணர்வை தூண்டுகிறேன் என்று முயற்சித்துள்ளார் இயக்குநர் முருகதாஸ். என் பங்குக்கு நானும் இரண்டு இடங்களில் விசில் அடித்து வைத்தேன்.  தெலுங்கில் டப் செய்யும்போதும் இதே தமிழ் உணர்வு குறையாமல் டப் செய்தால் உண்மையில் இயக்குநரை   பாராட்டலாம்.
இயக்கம்: அதிகமாக யோசித்து, அதிகமாக செலவு செய்து, அதிகமாக மெனக்கெட்டுள்ளனர்.  திருப்தி என்னவோ குறைவுதான்.

ஒளிபதிவு- சண்டைக்காட்சிகள் அருமை -பாடல்கள்  தனித்தனியாக தொங்கிக் கொண்டுள்ளது. படத்தில் ஒட்டவில்லை. !
,