நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Sunday, November 27, 2011

எக்ஸைல்

சாருநிவேதிதாவின் அடுத்த நாவல்- டிசம்பர் 6-ல் வெளியீடு


பணம் சம்பாதிப்பது எப்படி?. ஆரோக்யமாக வாழ்வது எப்படி?,  60 வயதிலும் 20 வயது இளைஞனாக வாழ்வது எப்படி?. வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வது எப்படி உங்களுக்கு பிடிக்காதவர்களை உங்கள் மீது எப்படி வசியம் கொள்ளச் செய்வது எப்படி என்பது போன்ற உங்களின் நூற்றுக்கனக்கான கேள்விகளுக்கு இந்த நாவலில் பதில் இருக்கிறது. ஆங்கிலேயர் வரவால் காணாமல் போன இந்திய ஆன்மீக மரபின் சாரத்தை - தமிழ் சித்தர் மரபின் சாரத்தை நம் கைமேல் எடுத்துத் தருகிறது எக்ஸைல்.
 Autofiction என்ற இலக்கிய வகை உலகில்  ஃபிரஞ்சைத் தவிர வேறு எந்த மொழியிலும் இதுவரை எழுதப்பட்டது இல்லை. அந்த ஃபிரெஞ்ச் ஆட்டோஃபிக்‌ஷன் நாவல்களும் வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை. அந்த வகையில் எக்ஸைல் தமிழில் எழுதப் பட்ட முதல் ஆட்டோஃபிக்சன் நாவல் எனலாம்.
 தமிழ் தெரிந்த ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய இந்த நாவல், இலகியமாக மட்டுமல்லாமல் ஒரு User Manual ஆகவும்,  உங்கள் வாழ்வுக்கான  ஒரு வழிகாட்டியாகவும் அமையும்.



புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம் இங்கே