நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Thursday, May 12, 2011

கோணங்கியின் கல்குதிரை குறித்து

நீல ரோஜ , தனிமை எனும் நாய் , சிவப்பு விளக்குகள், ரசோமான்,  உலக இலக்கியத்தில் ஜப்பானின் எரிமலை கல்லிருந்து உருவான சுழலும் சக்கரங்கள் குறுநாவல் வேனிற்கால கல்குதிரை இதழில் வெளிவந்துவிட்டது.  அதீத புனைவுலகம் பற்றி தன் விரிவான ஆய்வில் சேகுவேரா காரணமின்றி உயிதுறக்கவில்லை. என்கிறார் லத்தீன் அமெரிக்க இடதுசாரி கலைஞன் கொர்தசார்.  இந்த விரிவான கட்டுரையும், உலகில் இனி தோன்றப்போகும் நவ நாவல்குறித்து அலேன் ராத்கிரியே-யின் மிக நீண்ட உரையாடல் ஐரோப்பா  முழுவதயும் கடந்து செல்வதுடன். தென் அமெரிக்க கண்டத்தையும் ஊடுருவிச் செல்கிறது.  அத்துடன் பெண்கவிகளால் நெய்யப்பட்ட காற்று தமிழின் நெடுநல்வாடை யிலிருந்து வில்வரத்தினத்தின் காற்றுவழிகிராமம் வரை தாளம் படுமோ தறிபடுமோ யார்படுவார் (குயில் பாட்டு) என்பதாக நீள்கிறது... கல்குதிரை 18/19/20/ மூன்று இதழ்களும் சேர்ந்து ஒரே இதழாய் வெளிவந்துவிட்டது. - கோணங்கி 

No comments:

Post a Comment